அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மலையக தசாப்தம்” Kandukara Dashakaya” மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைய, எனது வேண்டு கோளுக்கு இணங்க எதிர்வரும் காலங்களில் அக்குறணை பிரதேசத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
அதன் முதற்கட்டமாக எனது முயற்சியில் கசாவத்தை விவசாய சங்க முக்கியஸ்தர் அப்துல் அஸீஸ் அவர்கள் ஒழுங்கமைப்பின் கீழ் ஊர் மக்களது பூரண ஒத்துழைப்புக்களுடன் கடந்த ஜுன் 6ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கசாவத்தை ரிதீவதுர குறும் பாதையின் அபிவிருத்தி பணிகள் நிறைவு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதையை பயன்படுத்தும் மக்கள் நீண்ட காலமாக போக்குவரத்து அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். குறிப்பாக மழைக்காலங்களில் இப்பாதையின் ஊடான போக்குவரத்து மிகுந்த சிரமம் மிக்கதாக காணப்பட்டது.
மேலும் இதன் பொழுது பிரதேசத்தின் ஏனைய அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் செய்யப்பட வேண்டிய மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.